close
Choose your channels

தளபதியின்மெர்சலுக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்

Wednesday, April 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர் உலக சாதனை செய்தது மட்டுமின்றி இந்த படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த வெற்றிப்படமாகவும் அமைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் பிரிட்டன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது. அதுமட்டுமின்றி தேசிய விருதுக்கும் இந்த படம் தேர்வு பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவமாக வரும் ஜூலை 22ஆம் தேதி தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. 

இந்த தகவலை மெர்சல் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருதை மிஸ் செய்த மெர்சல், தென்கொரியாவில் விருதுகளை குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.