close
Choose your channels

தொழிலதிபர் ஆகிறார் விஜய்யின் 'வாரிசு' பட நடிகை!

Sunday, June 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா தொழிலதிபராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தற்போது அவர் விஜய் உடன் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தொழில் அதிபராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்தியாவின் முன்னணி அழகுசாதன நிறுவனம் ஒன்றில் முக்கிய முதலீட்டாளராக ராஷ்மிகா தன்னை இணைத்துக் கொண்டதாக அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார்? எத்தனை சதவீதம் பங்குகள் வாங்கி உள்ளார்? என்பது குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் இந்த நிறுவனத்தில் ராஷ்மிகா மந்தனா மிகப் பெரிய தொகையை முதலீடு செய்ததை அடுத்து அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகா தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ததை அடுத்து புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் கையகப்படுத்துவதற்கான பாதைகளை உருவாக்க முடியும் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ‘வாரிசு’ என்ற தமிழ் படத்திலும் 'சீதாராமன்’ ’புஷ்பா 2’ ஆகிய தெலுங்கு படங்களிலும் ’குட்பை’ மற்றும் ’அனிமல்’ ஆகிய ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.