ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய் குறித்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டால் அவர்கள் 11 பேரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். தேவிகா தவிர அவரது குடும்பத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் இருந்த காசெல்லாம் செலவான பின்னர் பேருந்து நிலையங்களிலும் கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து தங்களுடைய நிலையை கூறினார்கள். உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிஸி ஆனந்த் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்த விஷயம் உடனடியாக விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தளபதி விஜய் உடனடியாக தூத்துகுடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்து அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அந்த 11 பெண்கக்குளும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை அடுத்து சென்னையில் அந்த 11 பெண்களும் அவரவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே ஒரு போன் காலில் 40 நாட்களாக தூத்துகுடியில் தவித்த 11 பெண்களை தளபதி விஜய் காப்பாற்றியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

More News

10ஆம் வகுப்பு தேர்வு தேதி மற்றும் அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

சம்பளம் போட பணமில்லை: பெருமாளுக்கே வந்த பெருஞ்சோதனை

உலகிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்ற தகவல் வெளியே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

50% சம்பளத்தை குறைக்க தயார்: பிக்பாஸ் நடிகர் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 70 ஆயிரமாக உயர்வு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 67,152ஆக இருந்த நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி

கொரோனாவில் இருந்து தப்பிக்க கணவர், குழந்தைகளுடன் அமெரிக்கா சென்ற கவர்ச்சி நடிகை!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சென்று உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது