அப்பா மீது இவ்வளவு பாசமா? விஜய் அளித்த உணர்வுபூர்வமான பதில்!

தளபதி விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் இடையே பிரச்சனை என்றும் இருவரும் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்கள் என்றும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் கூட இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் விஜய் தனது அப்பா மீது எந்த அளவுக்கு பற்றும் பாசமும் வைத்துள்ளார் என்பது நேற்று ஒளிபரப்பான சன் டிவி பேட்டியில் இருந்து தெரியவந்துள்ளது.

இயக்குனர் நெல்சன் எடுத்த இந்தப் பேட்டியில் பல சுவராசியமான விஷயங்களை கூறிய விஜய் அவரது தந்தை குறித்து கூறிய போது மிகவும் உணர்வு பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது: அப்பா என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேர் போன்றது என்றும் அப்பாவுக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் கடவுளை நம்மால் பார்க்க முடியாது, அப்பாவை நம்மால் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பதிலில் இருந்து அவர் தனது அப்பா எஸ்ஏசி மீது எந்த அளவுக்கு பாசமும் பற்றும் வைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

நாம்தான் ஜெயிப்போம், நம்பிக்கையுடன் இருங்கள்: மும்பை அணிக்கு நீடா அம்பானியின் நெகிழ்ச்சியான உரை

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மும்பை அணியின் உரிமையாளர்

அமைச்சர் பதவியேற்ற சக நடிகைக்கு வாழ்த்து கூறிய குஷ்பு!

தன்னுடன் நடித்த சக நடிகை அமைச்சர் பதவி ஏற்றதை அடுத்து அவருக்கு தனது வாழ்த்தினை சமூக வலைதளம் மூலம் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்

முன்னணி இயக்குனரால் கர்ப்பம்: டிவி நிகழ்ச்சியில் கண்ணீருடன் தெரிவித்த நடிகை!

முன்னணி இயக்குனர் ஒருவரால் தான் கர்ப்பமடைந்ததாகவும் ஆனால் அந்த இயக்குனரின் வற்புறுத்தல் காரணமாக கர்ப்பத்தை கலைத்ததாகவும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஒருவர் கண்ணீருடன்

முதலிடத்தை நோக்கி பெங்களூரு, முதல் வெற்றியைத் தேடி சென்னை

இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 22ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

வாழ்த்து கூறிய சமந்தாவுக்கு நன்றி கூறிய சூர்யா!

நடிகர் சூர்யாவுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறிய நிலையில் சமந்தாவுக்கு தனது நன்றியை சூர்யா சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.