விஜய் 61 படம் இளையதளபதியின் மூன்று முகமா?

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் விஜய் முதல்முறையாக 'விஜய் 61' படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மூன்று வேட படம் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரஜினியின் 'மூன்று முகம்' படம் என்பது போல இந்த படம் விஜய்யின் மூன்று முகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

விஜய் இதற்கு முன்னர் அழகிய தமிழ்மகன்', 'புலி' 'கத்தி' ஆகிய படங்களில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நிலையில் முதல்முறையாக மூன்று வேடங்கள் ஏற்று நடிக்கும் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

More News

ராணி எலிசபெத்துடன் கைகுலுக்கிய கமல்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம்  எலிசபெத் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒருவர் என்பதை நேற்று பார்த்தோம்...

நெடுவாசல் செல்கிறேன். மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் நெடுவாசல் விவசாயிகளை காப்பாற்ற அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்...

முத்துராமலிங்கம் படத்தை உடனடியாக நிறுத்த சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ராஜதுரை இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'முத்துராமலிங்கம். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது....

ஓபிஎஸ் வீட்டின் முன் பேசிய ஜெயலலிதா ஆவி. சாமியார் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது ஆன்மாவின் ஆணைக்கேற்ப அனைத்து உண்மைகளையும் கூறியதாக சென்னை மெரீனாவில் மெளனத்தை ஓபிஎஸ் எப்போது கலைத்தரோ அதும்முதல் பலர் ஜெயலலிதாவின் ஆவி, ஆன்மா பேசியதாக தங்கள் கருத்துக்களை (கதைகளை) கூறி வருகின்றனர்.

துரைமுருகனை சிரிக்க வைத்த ஜெயலலிதா- ஓபிஎஸ் சொல்லும் சுவாரஸ்யம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அவரை சசிகலா ராஜினாமா செய்ய வற்புறுத்தினார் என்பது தெரிந்ததே