'தளபதி 65' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்: படக்குழுவினர் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. வெகுவிரைவில் நாயகி பூஜா ஹெக்டே இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஜார்ஜியாவில் தற்போது குளிரான தட்பவெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என்றும் தினமும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாததால் படக்குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டுத்தான் படக்குழுவினர் சென்னை திரும்புவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது என்பதும் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தினேஷ் கார்த்திக் பயன்படுத்திய சென்னை லோக்கல் பாஷை: வீடியோ வைரல்

நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 152 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணிக்கு

'கர்ணன்' படத்தில் குதிரையில் வரும் சிறுவன் சீரியல் நடிகரா? வைரல் புகைப்படங்கள்

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்தது என்பது தெரிந்ததே

"தொலைந்து போன தங்க நகரம்".....! எகிப்தில் கண்டுபிடிப்பு....!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட நகரம்  ஒன்று, கடந்த செப்டம்பரில் ஏப்ரல் மாதம் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

மோடிக்கு சவால் விடும் லேடி...! சபாஷ் சரியான போட்டி....!

மாத்துவா சமூகத்திற்கு நான் எதையும் செய்யவில்லை என மோடி கூறுகிறார்.

ஆம்பூர் காவலர்கள் உற்சாகமாக வேலை செய்ய புதிய முயற்சி...!

கோடை வெயிலை தாக்குபிடிக்க முடியாத காரணத்தால், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.