1000 பால் பாக்கெட்டுக்கள், 250 குடும்பங்களுக்கு காய்கறிகள்: அசத்தும் விஜய் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் சில உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்த தகவல் வெளிவந்துள்ளது. தேனியை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் அங்கு உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கி உதவி செய்துள்ளனர்.

அதேபோல் வடசென்னையில் உள்ள விஜய் ரசிகர்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பால் பாக்கெட்களை வாங்கி கொடுத்துள்ளனர். இதன் மூலம் அங்கு பால் இல்லாமல் கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் உதவி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் பல உதவிகளை செய்து வரும் விஜய் ரசிகர்களுக்கு இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி கொரோனாவால் தென்னாப்பிரிக்காவில் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கீதா ராம்ஜி

டெல்லி தப்ளிக் ஜமாத் பின்னணி என்ன??? மாநாடு குறித்த விரிவான தகவல்கள்!!!

டெல்லி நிஜாமூதின் பகுதியில் அமைந்திருக்கும் தப்ளிக் அமைப்பு, தற்போது இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது

கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை: ஆறு வார குழந்தை இறந்ததால் நாடே சோகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட தற்போது அமெரிக்காவில் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் 6வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்ததால் பரபரப்பு

டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்

டெல்லியில் சமீபத்தில் நடந்த மத வழிபாட்டுத் தலத்தில் கலந்துகொண்டவர்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்