close
Choose your channels

ஷிமோகாவில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய தளபதி விஜய்!

Sunday, December 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய்யின் படப்பிடிப்பு குறித்து கேள்விப்பட்ட கர்நாடக விஜய் ரசிகர்கள் ஷிமோகா சிறை முன் ஆயிரக்கணக்கில் தினமும் கூடி வருவதும் அவர் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னும் நூற்றுக்கணக்கானோர் கூடி வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு செல்லும் போதும் படப்பிடிப்பில் இருந்து வெளியே வரும்போதும் ரசிகர்களுக்கு என சில நிமிடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு கை காட்டி கொண்டு செல்வதை விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதே போல் தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் முன் காத்திருக்கும் ரசிகர்களையும் பார்க்க ஒரு சில நிமிடங்கள் அவர் ஒதுக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் படப்பிடிப்பு வைத்தால் தான் ரசிகர்களின் அன்பு தொல்லை என்று பார்த்தால் கர்நாடக மாநிலத்திலும் தமிழகத்துக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் அவரது படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் இருந்து வருவது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.