'மாஸ்டர்' விநியோகிஸ்தருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: கைகொடுத்து உதவிய தளபதி

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸ் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருவதால் இந்த படம் வரும் தீபாவளி அன்று தான் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் உலக அளவிலான ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லலித், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பைனான்சியருக்கு அதிக வட்டி செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இதனை அறிந்த தளபதி விஜய் தயாரிப்பாளர் லலித்தின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவருடைய நிறுவனத்திற்கு இன்னொரு படம் நடித்துத் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் கேட்டு கொண்டதால்தான் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவில்லை என்பதும், தனக்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட லலித்துக்கு தளபதி விஜய் கைகொடுத்து உதவியுள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனேகமாக சன் பிக்சர்ஸ்-ஏஆர் முருகதாஸ் படத்தை அடுத்து லலித் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

ஓடிடி ரிலீஸ்: ரசிகர்களை சமாதானப்படுத்திய பிரபல நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை.

ஸ்வீட் கொடுக்க வந்த பெண் ஊழியருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த அதிகாரி: வைரலாகும் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் பெண் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரிக்கு பிறந்தநாள் ஸ்வீட் கொடுக்க வந்தபோது அந்த பெண்ணை இழுத்து பிடித்து லிப்லாக் முத்தம்

குடிகாரர்கள் எதிரொலி: சேவையை நிறுத்த போகிறாரா ராகவா லாரன்ஸ்?

ஒருபக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் தமிழக அரசு, பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் சூப்பர் புயல்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா???

கடந்த சில ஆண்டுகளாகவே வங்ககடலை ஒட்டி புயல்கள் தோன்றி, கரையை கடப்பது வாடிக்கையாகி விட்டது.

கொரோனா பரவல்:   நேற்று ஒரேநாளில் 4 ஆவது இடத்தைப் பிடித்து அதிச்சியை ஏற்படுத்திய இந்தியா!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து கொண்டே வருகிறது.