close
Choose your channels

கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தளபதி விஜய் கொடுத்த மிகப்பெரிய தொகை!

Wednesday, April 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோலிவுட்டின் பல பிரபல நடிகர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்த நிலையில் கோலிவுட்டின் மாஸ் நடிகரான தளபதி விஜய்யிடம் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிருதியாக இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

மேலும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.