மெர்சலை விட இருமடங்கு: அதிர்ச்சி தரும் 'தளபதி 63' படக்குழு

  • IndiaGlitz, [Tuesday,June 04 2019]

விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பாஜக தமிழக தலைவர்களின் எதிர்ப்பால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமானது.

இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒன்று. குறிப்பாக 'ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இந்த படத்தின் பாடல்கள் ரூ.2.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் ஆடியோ நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆடியோ உரிமையை பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் 'தளபதி 63' படத்தின் பாடல் உரிமையை பெற பிரபல ஆடியோ நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் 'மெர்சல்' ஆடியோ உரிமையின் விலையை விட இருமடங்கு அதாவது ரூ.5 கோடி கேட்டு தயாரிப்பு தரப்பு ஆடியோ நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாம். தமிழ்த்திரையுலகில் பல படங்களின் மொத்த விற்பனையின் தொகையே ரூ.5 கோடி என்ற நிலையில், இந்த விலைக்கு 'தளபதி 63' படத்தின் ஆடியோ உரிமை விற்பனையானால் உண்மையில் அதுவொரு பெரிய சாதனைதான் என்று கூறப்படுகிறது.

More News

நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணியை எதிர்க்கும் வலுவான அணி!

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால்

'களவாணி 2' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கிய 'களவாணி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5.30 மணிக்கு அறிவிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

'2.0' சீன ரிலீஸ் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய ஆச்சரிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில்

அடிதடி ரகளை மூக்கில் ரத்தம்: நிச்சயதார்த்தம் ஆன நடிகர்-நடிகையின் பரிதாப நிலை!

நிச்சயதார்த்தம் முடிந்த நட்சத்திர ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் அடித்து ரகளை செய்ததால் காயம் ஏற்பட்டு தற்போது போலீஸ் கேஸ் ஆகியுள்ளது

'டிக்டாக்' வீடியோவால் சந்தேகம்: கல்லூரி பேராசிரியையை குத்தி கொலை செய்த கணவர்!

டிக்டாக் வீடியோவால் கல்லூரி பேராசிரியை ஒருவரை அவரது கணவரே குத்தி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது.