close
Choose your channels

தாமரையின் கணவர் இந்த கடையில் தான் வேலை பார்க்கின்றாரா? வைரல் புகைப்படம்!

Friday, December 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவர் தனது அப்பாவித்தனத்தை மட்டுமின்றி ஆங்காங்கே தனது புத்திசாலித்தனத்தையும் காட்டி சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 20 போட்டியாளர்கள் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பதே பெரிய சாதனை தான் என்பதும், போகிற போக்கை பார்த்தால் அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 4 போட்டியாளர்களில் ஒருவராக கூட வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க்கில் தாமரை தனது கடந்த கால வாழ்க்கையை தெரிவித்திருந்தார் என்பதும் முதல் கணவர் செய்த கொடுமையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்து விட்டதாகவும், அதன்பின் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனது மாமியார் தனக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாகவும், தன்னை மகள் போல் பார்த்து கொண்டதாகவும் கூறினார்.

இருப்பினும் தனது மகனை முதல் கணவரின் குடும்பத்தினர் தன்னுடன் சேரவிடவில்லை என்றும் எனது மகனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவர் கண்ணீருடன் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தாமரை மகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அடுத்து தாமரை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தாமரையின் கணவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாமரையின் கணவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.