close
Choose your channels

அர்னாப் தலைமையிலான சேனலில் இணையும் தமிழக செய்தியாளர்

Tuesday, February 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டைம்ஸ் ஆப் இந்தியா புகழ் அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்' என்ற ஆங்கில தேசிய சேனலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த சேனலில் தமிழ் செய்தி சேனல் தந்திடிவியின் முன்னணி செய்தி ஆசிரியரான ஹரிஹரன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தந்தி டிவியின் சூடுபறக்கும் விவாதங்களை நடத்தி வந்த ஹரிஹரன், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் உள்ளிட்ட பல சர்வதேச, தேசிய பிரமுகர்களை பேட்டி எடுத்தவர்.
இந்நிலையில் ஹரிஹரன் திடீரென தந்தி டிவியில் இருந்து விலகி அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் சேனலில் இணையவுள்ளார். தமிழ் சேனலில் இருந்து தற்போது தேசிய சேனலுக்கு அவர் செல்வதால் நாடு முழுவதும் அவரது விவாதங்கள் ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.