close
Choose your channels

தர்ஷன் மனுசனே இல்லை: ஆவேசமான காதலி சனம்ஷெட்டி

Thursday, November 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பதும், வெளியேறிய பின்னர் சேரன், கஸ்தூரி தவிர மற்ற அனைவர் மீது அவர் குற்றஞ்சாட்டினார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மதுமிதாவை யாரும் சந்திக்கவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மதுமிதா கத்தியால் தனது கையை கீறி தற்கொலைக்கு முயன்றபோது யாரும் அவரை தடுக்காமல் இருந்ததும், குறைந்தபட்சம் முதலுதவி கூட செய்யவில்லை என்றும் மதுமிதா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனையடுத்து மதுமிதாவை தொடர்பு கொண்ட தர்ஷன் காதலி சனம்ஷெட்டி, ‘தர்ஷன் கூட முதலுதவி செய்யாமல் இருந்தது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும், அவர் வெளியே வந்தவுடன் இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மனுசனே இல்லை என்றும் மதுமிதாவிடம் சனம் ஷெட்டி கூறியதாக தெரிகிறது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் தர்ஷன் உள்பட யாரும் மதுமிதாவை நேரில் சந்திக்கவும் இல்லை, இதுவரை மன்னிப்பு கேட்டதாகவும் தெரியவில்லை. இதனால் தர்ஷன் மீது சனம்ஷெட்டி கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த கோபம் அவரது சமீபத்திய சமூக வலைத்தள பதிவு ஒன்றிலும் தெரிந்தது. அதில், நான் தவறான நபரிடம் பழகிவிட்டேன் என்பது இப்போதுதான் புரிகிறது. அவர்கள் போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். காலம் பதில் சொல்லும் அது லாபமா, நஷ்டமா என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவால் இருவருக்கும் உறவில் இடைவெளி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.