close
Choose your channels

கோடிக்கணக்கில் வாரிகொடுத்த அரசன்னே...? சத்தமில்லாமல் நடந்த காரியம்...!

Monday, May 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்வரின் கொரோனா நிதிக்கு அரசன் சோப் நிறுவனம், மிகப்பெரிய தொகையை நிவாரணமாக அளித்துள்ளது.

தமிழகத்தில், கோவையைச் சார்ந்த "பிரபு சோப் வொர்க்ஸ்" நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள சோப் தான் அரசன். இதை துவங்கியவர் கோவையில் சேர்ந்த அருண் சிங் என்பவர் தான். சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த சோப் நிறுவனமானது, தற்போது தமிழகத்தில் மிகச்சிறந்த பிஸ்னஸ் மாடல்களில் சிறப்பான ஒன்றாக வலம் வருகிறது. தமிழகத்தில் விற்பனையாகக்கூடிய முன்னணி சோப்களில் ஒன்றாக அரசன் விளங்குகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதி தொகையை, பிரபு சோப் வொர்க்ஸ் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பாக 1.5 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து யாரும் தொகையை வழங்கவில்லை, சத்தமில்லாமல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அண்மையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நிதி கொடுத்து, முதல்வரிடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. பிரபு சோப் வொர்க்ஸ் சத்தமே இல்லாமல் பெரிய தொகையை கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.