மணிரத்னம் பட நடிகை மீது முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை

மணிரத்னம் இயக்கிய ’ஓகே கண்மணி’ மற்றும் சமீபத்தில் வெளியான ’ஆதித்ய வர்மா’ போன்ற படங்களில் நடித்தவர் லீலா சாம்சன். இவர் முன்னாள் சென்சார் அமைப்பின் தலைவரும் ஆவார். இவர் சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ஆடிட்டோரியத்திற்கு முறைகேடாக செலவீனம் செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலாக்ஷேத்ரா அறக்கட்டளையால் ஆடிட்டோரியம் கடந்த 2006ஆம் ஆண்டு புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அறக்கட்டளையின் இயக்குநராக பதவி வகித்த லீலா சாம்சன், முறைகேடாக செலவு செய்ததாக புகார் எழுந்தது. இவர் மட்டுமின்றி இவருடன் சேர்த்து கணக்கு அலுவலர் மற்றும் பொறியியல் அதிகாரி ஆகியோரின் பெயர்களையும் சிபிஐ வழக்கில் பதிவு செய்துள்ளது.

பொதுநிதி விதிகளை மீறி புனரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் செய்ததாகவும் கூடுதலாக ரூ.6.02 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறக்கட்டளை அதிகாரிகள் சிபிஐக்கு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News

18 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன்! ஒரு ஆச்சரிய தகவல்!

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றால் அதை செல்போன் என்றே கூறலாம். செல்போன் போல் மிகவேகமாக அனைத்து மக்களிடம் போய் சென்றது வேறு எந்தப் பொருளும் இல்லை

சீன மொழியில் வெளியாகிறது த்ரிஷ்யம்..!

ஜீத்து ஜோசப் இயக்கி மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்திருந்த த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது.

உண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கனுமா, என் பெயர் ராகுல் "சாவர்க்கர்" இல்லை, ராகுல் "காந்தி"..!

"நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி" என்று இன்று மோடி ஆட்சிக்கு எதிராக

சென்னை நபரை வலைவீசி தேடும் சச்சின்: தமிழில் பதிவு செய்த டுவீட்

சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புவதாகவும் அவரை கண்டுபிடிக்க தனக்கு உதவி செய்யும்படியும் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது

ஐதராபாத் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிணங்களுக்கு வாரம் ஒருமுறை ஊசி!

சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.