close
Choose your channels

அவர்தான் என் வீட்டுக்கு வரணும்: சச்சின் தேடிய சென்னை தமிழர் பேட்டி

Sunday, December 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது டுவிட்டரில் சென்னையில் உள்ள ஒரு தமிழர் தனக்கு ஒரு முக்கியமான டிப்ஸ் கொடுத்ததாகவும் அவரை தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஒரே ஒரு டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சச்சின் தேடிய அந்த நபரை தனியார் தொலைக்காட்சி ஒன்று தேடி கண்டுபிடித்து அவரிடம் பேட்டியும் எடுத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் ’நான் பணிபுரிந்து கொண்டிருந்த இடத்தில் சச்சின் அவர்களை தற்செயலாக சந்தித்தது உண்மை தான் என்றும், அப்போது அவரை சந்தித்த போது நான் ஒரு ஆலோசனை கூறலாமா என்று அவரிடம் அனுமதி கேட்டு அதன் பின்னர் அவர் பயன்படுத்தும் எல்போ கார்ட் குறித்து ஒரு சிறிய டிப்ஸ் கூறியதாகவும், அதனை அவர் தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறியதாகவும் தெரிவித்தார்.

நான் கூறிய இந்த டிப்ஸை அவர் அடுத்த போட்டியிலேயே சரி செய்து கொண்டதை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும் இந்த தகவலை நான் என்னுடைய அம்மாவை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் யாரும் இதனை நம்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். தற்போது அவரை இதனை ஞாபகப்படுத்தி டுவீட் செய்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார் .

மேலும் சச்சினிஅ நீங்கள் சந்திக்க செல்வீர்களா என்று கேட்டபோது சச்சினை நான் சென்று சந்திப்பது விட சச்சின் என்னுடைய வீட்டிற்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் என்னுடைய தெருவில் உள்ளவர்கள் அங்கு உள்ள குழந்தைகள் அனைவரும் சச்சினை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கின்றார்கள் என்று கூறினார். சச்சின் தேடிய சென்னை தமிழரின் ஆசையை பூர்த்தி செய்ய சச்சின் சென்னைக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.