அவர்தான் என் வீட்டுக்கு வரணும்: சச்சின் தேடிய சென்னை தமிழர் பேட்டி

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது டுவிட்டரில் சென்னையில் உள்ள ஒரு தமிழர் தனக்கு ஒரு முக்கியமான டிப்ஸ் கொடுத்ததாகவும் அவரை தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஒரே ஒரு டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சச்சின் தேடிய அந்த நபரை தனியார் தொலைக்காட்சி ஒன்று தேடி கண்டுபிடித்து அவரிடம் பேட்டியும் எடுத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் ’நான் பணிபுரிந்து கொண்டிருந்த இடத்தில் சச்சின் அவர்களை தற்செயலாக சந்தித்தது உண்மை தான் என்றும், அப்போது அவரை சந்தித்த போது நான் ஒரு ஆலோசனை கூறலாமா என்று அவரிடம் அனுமதி கேட்டு அதன் பின்னர் அவர் பயன்படுத்தும் எல்போ கார்ட் குறித்து ஒரு சிறிய டிப்ஸ் கூறியதாகவும், அதனை அவர் தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறியதாகவும் தெரிவித்தார்.

நான் கூறிய இந்த டிப்ஸை அவர் அடுத்த போட்டியிலேயே சரி செய்து கொண்டதை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும் இந்த தகவலை நான் என்னுடைய அம்மாவை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் யாரும் இதனை நம்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். தற்போது அவரை இதனை ஞாபகப்படுத்தி டுவீட் செய்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார் .

மேலும் சச்சினிஅ நீங்கள் சந்திக்க செல்வீர்களா என்று கேட்டபோது சச்சினை நான் சென்று சந்திப்பது விட சச்சின் என்னுடைய வீட்டிற்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய நண்பர்கள் மற்றும் என்னுடைய தெருவில் உள்ளவர்கள் அங்கு உள்ள குழந்தைகள் அனைவரும் சச்சினை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கின்றார்கள் என்று கூறினார். சச்சின் தேடிய சென்னை தமிழரின் ஆசையை பூர்த்தி செய்ய சச்சின் சென்னைக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மறுமணம் செய்ய விரும்பிய விவாகரத்து ஆன டீச்சருக்கு நேர்ந்த விபரீதம்: 

கணவரை விவாகரத்து செய்த 43 வயது டீச்சர் ஒருவர் மறுமணம் செய்ய விரும்பியபோது ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

ஷிமோகாவில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய தளபதி விஜய்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே.

அதிரடி ஆக்சன் கேரக்டரில் 'பிக்பாஸ் 3' நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலக வாய்ப்பை பெற்று வந்த நிலையில்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்!

ஒரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள் மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தன. ஐந்து பாடல்கள், காமெடிக்கு என தனி டிராக் இல்லாத படங்களே இல்லை