தூற்றலே போற்றலுக்கு வழிவகுக்கிறது… விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!!!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் விமர்சனங்களே எங்களது பெருமையை எடுத்துச் சொல்ல வழிவகுத்து கொடுத்து இருக்கிறது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தகவல் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இதுகுறித்து விமர்சித்த எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் தமிழகத்தில் முதலீடுகளே இல்லை எனச் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்து கடும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து தமிழகத்திற்குத் தற்போது கிடைத்துள்ள முதலீடுகள் வழக்கமானதுதான் என்றும் கூறத் தொடங்கினர். அடுத்து எப்போதும் இருக்கும் முதலீட்டு அளவில் 25% முதலீட்டை மட்டுமே தமிழகம் பெற்றிருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.

இத்தகைய விமர்சனங்களுக்குப் பதில் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டாலின் ஒன்றும் அறியாதவர் போல சொல்லிக் கொண்டிருக்க முடியும். எல்லாம் மக்கள் மன்றத்தில் தெளிவாக உள்ளன. ஸ்டாலின் இதுபோன்று குற்றச்சாட்டுகளை வைப்பதால் நாங்கள் எங்களுடைய சாதனைகளை கூற அவர் வழிவகை செய்து கொடுக்கிறார்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூரில் வல்லம் வடகால் தொழில் பூங்காவில் 7 ஆயிரம் பேர் தங்குவதற்காக ரூபாய் 377 கோடி செலவில் 9.50 ஏக்கர் நிலப்பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக 32 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 700 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்குவதற்கான குடியிருப்பு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

More News

ஐபிஎல் திருவிழா : ஸ்பெஷல் டிரைலர் நினைவாகுமா கிங் கோலியின் கனவு?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் அதிக நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ள அணி ராயல் சாலஞ்சர்ஸ்

நான் தினமும் கோமியம் குடிக்கின்றேன்: அக்சயகுமார் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் தன்னுடைய ஆரோக்கியத்திற்காக தினந்தோறும் கோமியம் குடிப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தன் உயிரைத் தியாகம் செய்து எஜமானைக் காப்பாற்றிய செல்லப்பிராணி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைக் கடித்து தன்னுடைய எஜமானருக்கு எச்சரித்து செய்திருக்கிறது ஒரு நாய்.

மாட்டுக் கோமியத்தில் சானிடைசரா??? பரபரப்பு ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கிருமிநாசினி தன்மைக் கொண்டது என்ற நம்பிக்கை ஒருசிலரிடம் வலுவாக இருந்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஸ்பிரே!!! அசத்தும் புதிய கண்டுபிடிப்பு!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையிலான களிம்பு ஒன்றை முன்னதாக அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி இருந்தனர்.