கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதராக தேர்வு!!!

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

 

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் இவர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 5 கிலோ அசிரி, காய்கறிகள், சமையெல் எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகளை மதுரைச் சுற்றி பல்வேறு இடங்களில் வழங்கியதால் மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டார். தனது மகளின் படிப்பு செலவிற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தைக் கொண்டு இந்தப் பொருட்களை வாங்கியதாகவும் கொரோனா நேரத்தில் மக்கள் பசியால் வாடுவதைத் தவிர்ப்பதற்காக இச்செயலை செய்ததாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அவரது மகள் நேத்ரா 9 வகுப்பு படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் ஐஏஎஸ் ஆகி ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத் தளங்களிலும் சலூன் கடைக்காரர் மிகவும் புகழப்பட்டு வந்தார். அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மங்கீபாத் நிகழ்ச்சியில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனை வெகுவாகப் பாராட்டி இருந்தார். மேலும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவரது மகள் நேத்ராவை ஐ.நாவின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேத்ராவிற்கு ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா வின் கூட்டமைப்பில் வறுமை மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை பற்றி உரையாற்றுவதற்கு அழைப்பும் விடுக்கப் பட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் ஏழைகளின் பசியை பற்றி நினைத்து பார்த்த சலூன் கடைக்காரரின் புகழ் இப்போது ஐ.நா வரைக்கும் பரவி இருக்கிறது என்பதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More News

400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்!!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் தனது 400 பணியாளர்களை வெளியேற்றும் முடிவினை எடுத்து இருக்கிறது.

கணவருடன் சேரவிடாமல் தடுத்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள்!

வரதட்சனை கொண்டுவா என கொடுமைப்படுத்தி மருமகளை கொலை செய்யும் காலம் மலையேறிவிட்டது என்றும், தற்போது வரதட்சணை கேட்டால் மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் காலம் வந்துவிட்டது

ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது: ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை!!!

இந்தியாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது போன்றவை வழங்கி சிறப்பிக்கப்படுவது வழக்கம்.

தனுஷ்-சன்பிக்சர்ஸ் படத்தின் இயக்குனர் யார்? பரபரப்பு தகவல்

தனுஷ் நடித்த 40வது திரைப்படமான 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும்

ஓடிடிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.