'ராட்சசி', 'அடுத்த சாட்டை' இரண்டும் ஒரே கதையா? இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,June 16 2019]

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அராஜகங்கள், அதனை எதிர்த்து போராடும் ஒரு ஆசிரியை தான் 'ராட்சசி' படத்தின் கதை. தமிழ் சினிமாவில் பல பள்ளிக்கூட கதைகள் வெளிவந்திருந்தாலும் அவற்றில் 'சாட்டை' போன்ற ஒருசில திரைப்படங்களே மக்களின் மனதை கவர்ந்தது. அந்த வகையில் ஜோதிகாவின் 'ராட்சசி' படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'சாட்டை' படத்தை இயக்கிய இயக்குனர் எம்.அன்பழகன் தற்போது 'அடுத்த சாட்டை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் 'சாட்டை' படம் போன்றே மாணவர்களின் பிரச்சனையை மையமாக வைத்த ஒரு கதைதான். இந்த நிலையில் 'ராட்சசி' மற்றும் 'அடுத்த சாட்டை' ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே கதையம்சம் கொண்டதாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து இயக்குனர் எம்.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது, 'அரசுப் பள்ளியை மையமாக வைத்து ஆயிரம் படம் எடுக்கலாம் என்றும், அந்த அளவுக்கு அரசு பள்ளிகளில் பிரச்னைகள் இருப்பதாகவும், நான் ’சாட்டை’ படத்தில் சொல்லாத வேறு சில விஷயங்களை வைத்து 'ராட்சசன்' படம் எடுத்திருக்கலாம் என்றும் ஆனால் 'சாட்டை 2' படம் வேறு மாதிரியான களம் என்றும் கூறினார்.

'சாட்டை' படத்தில் அரசுப் பள்ளியில் நடக்கிற பிரச்னைகளைச் சொன்ன மாதிரி, 'அடுத்த சாட்டை' படத்தில் தனியார் கல்லூரியில் நடக்கும் பல பிரச்னைகளைச் சொல்லியிருப்பதாகவும் இயக்குனர் அன்பழகன் தெரிவித்தார். குறிப்பாக 'மாணவர்கள் மாதிரி பாராளுமன்றம்’னு ஒரு விஷயம் நிறைய இடங்களில் இருப்பதாகவும், ஆனால், வெளியில பலருக்குத் தெரியாது என்றும் கூறிய இயக்குனர், கல்லூரிக்குள்ளேயே தேர்தல் வெச்சு பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர்னு துறைகள் பிரிச்சு, பாராளுமன்றம் மாதிரி மாணவர்கள் செயல்படுறதை 'அடுத்த சாட்டை' படத்தில் காட்டியிருப்பதாகவும் கூறினார்.

மேலும் 'சாட்டை' படத்தில் இருந்து மட்டுமின்றி சமுத்திரக்கனி நடித்த 'அப்பா' படத்தில் இருந்தும் இந்த படத்தை வேறுபடுத்தி காட்ட முயற்சித்துள்ளதாகவும் இயக்குனர் அன்பழகன் கூறியுள்ளார்.

More News

'கொரில்லா' படக்குழுவின் மாஸ்டர் பிளான் குறித்து விஜய்சேதுபதி!

ஜீவா நடித்த கொரில்லா திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேதியில் விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' உள்பட நான்கு திரைப்படங்கள் ரிலீஸ்

சர்வதேசப்பட விழாவுக்கு தேர்வான ஜிவி பிரகாஷ் திரைப்படம்

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜிவி பிரகாஷ், நெடுமுடிவேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் 'சர்வம் தாளமயம்'.

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியில் மாற்றமா?

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு

'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' ஒரு தரமான சம்பவம்: ஏ.ஆர்.,முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

ஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர்.