close
Choose your channels

ரஜினிக்கு இந்த தைரியம் இருக்குதா? பிரபல இயக்குனர் கேள்வி!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் தைரியம் ரஜினிகாந்துக்கு இருக்கின்றதா? என பிரபல இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த டிரைலர் குறித்து தனது கருத்தை தெரிவித்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள், ‘இது போன்று தத்ரூபமாக அச்சமின்றி நடிக்க அல்லு அர்ஜுன் என்ற ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரால் மட்டுமே முடியும் என்றும், பவன் கல்யான், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் ஆகியவர்களால் இதுபோன்றோ அல்லது இதற்கு மேலும் நடிப்பதற்கு தைரியம் இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் புஷ்பா என்றால் பூ என்று அர்த்தமில்லை என்றும், அது நெருப்பு என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவை அடுத்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் ரசிகர்கள் ராம்கோபால் வர்மா கடுமையாக விமர்சனம் செய்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.