close
Choose your channels

தமிழ் சினிமாவின் மான மரியாதையை காப்பாற்றிய படம் 'விக்ரம்': பிரபல தயாரிப்பாளர்

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் மானம் மரியாதையை காப்பாற்றிய படம் 'விக்ரம்’ என்ற பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி குறித்து பிரபல தயாரிப்பாளர் கேயார் நமக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, ‘விக்ரம்’ திரைப்படத்தின் முதல் ஐந்து நாள் வசூலில் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய் ஷேர் கிடைத்துள்ளது என்றும் சமீபத்தில் வெளியான எந்த படத்திற்கும் இந்த அளவுக்கு ஷேர் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது என்றும் ஒரு வாரம் முழுவதுமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த படத்தை பார்த்தவர்களே மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ் சினிமா கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் 'விக்ரம்’ படம் தான் சமீபத்தில் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் என்று தெரிவித்தார்.

அண்டை மாநிலங்களில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். கேஜிஎப் 2’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் மானத்தை காப்பாற்றிய ஒரே படமாக 'விக்ரம்’ படம் கருதப்படுகிறது என்றும் இந்த படத்தின் சாதனையை முறியடிக்க இந்த ஆண்டில் வேறு எந்த படமும் வர வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் கேயார் பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.