அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் என்னும் பிரபல தமிழ் எழுத்தாளர் நேற்றிரவு காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று (8-12-17) பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தாயார் மற்றும் தந்தையார் பெயரை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற புனைப்பெயரில் ஜ.ரா.சுந்தரேசன் பல நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இன்று வாசகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தமிழ் வார இதழ் குமுதம் பத்திரிகையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய இவர் 'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்', 'மாணவர் தலைவர் அப்புசாமி', 'அப்புசாமியும் 1001 இரவுகளும்' போற பல பிரபலமான நாவல்களை எழுதியுள்ளார். அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை' என்ற அமைப்பையும், 'அக்கறை' என்ற அமைப்பையும் பல ஆண்டுகளாக நடத்தி வந்தவர் பாக்கியம் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.