close
Choose your channels

சிவகார்த்திகேயன் மகள் பெற்ற முதல் விருது

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த கிறிஸ்துமஸ் தின படமாக வெளியான ஐந்து படங்களில் ஒன்று சிவகார்த்திகேயனின் 'கனா'. அருண்ராஜா காமராஜின் சிறப்பான திரைக்கதை, ஐஸ்வர்யா ராஜேஷின் கடுமையான அர்ப்பணிப்பான நடிப்பு, சிறப்பு வேடத்திலும் மாஸ் நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன், சத்யராஜின் அனுபவ நடிப்பு ஆகியவை இந்த படத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் நேற்று வடபழனியில் நடந்த இந்த படத்தின் வெற்றி விழாவில் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவருக்கும் விருந்து வழங்கி கெளரவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் 'வாயாடி பெத்த புள்ளே' என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடிய அவருடைய மகள் ஆராதனாவுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இந்த விருதை சத்யராஜ் வழங்கினார். ஆராதனா பெறும் முதல் விருது இந்த விருதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், 'அருண்ராஜாவுக்கு நான் உதவி செய்ததாக பலர் கூறுகின்றனர். உண்மையில் நான் அவருக்கு செய்தது உதவி இல்லை, கடமை. நான் அவருக்கு செய்ததை அவர் எனக்கு இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிட்டார். வெற்றியினால் கிடைத்த பணம் மட்டுமின்றி இந்த படத்தால் எனக்கு பேரும் புகழும் கிடைத்தது. இந்த படம் எந்நாளும் பேசப்படும் படமாக கொடுத்த அருண்ராஜாவுக்கு நன்றி ' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.