close
Choose your channels

பிக்பாஸ் ஃபினாலே: ஐந்து பேரில் முதல் நபராக வெளியேறிய போட்டியாளர் இவரா?

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்றே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அமீர், ராஜு, பிரியங்கா, நிரூப் மற்றும் பாவனி ஆகிய ஐந்து இறுதிப்போட்டியாளர்களில் நிரூப் இன்று வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குகளின் அடிப்படையில் அமீர் தான் குறைவான வாக்குகளை பெற்று இருந்தார் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று நிரூப் வெளியேறி இருப்பதை பார்க்கும் போது அமீர் வாக்குகளில் நிரூப்பை முந்திவிட்டதாக தெரிகிறது. இருப்பினும் நிரூப் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மீதமுள்ள நான்கு போட்டியாளர்களான ராஜூ, பிரியங்கா, பாவனி மற்றும் அமீர் ஆகியவர்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் 50 லட்சம் ரூபாய் பரிசையும் வெல்வது யார் என்பதை இன்னும் சில மணி நேரங்களில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.