இந்தியாவின் அண்டை நாட்டில் முதல் முறையாக வெளியாகும் தமிழ்ப்படம்.. 'லியோ' சாதனை..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு நாட்டில் முதல்முறையாக ‘லியோ’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் முதல்முறையாக ‘லியோ’ என்ற தமிழ் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படம் அந்நாட்டில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகளைப் போலவே வங்கதேச நாட்டிலும் விஜய்யின் படத்தை பார்க்க அந்நாட்டு சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருப்பதாக அந்நாட்டின் விநியோக உரிமையை எடுத்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் வங்கதேசத்தில் வெளியாக உள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுவரை வெளியாகாத நாடுகளிலும் வெளியாக இருப்பது படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

என்னை பத்தி மட்டும் பேசு, என் குடும்பத்தை பத்தி பேசாதே.. விசித்ராவை ஒருமையில் பேசிய ஜோவிகா..!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா தனது அம்மா வயது இருக்கும் விசித்ராவை பார்த்து ஒருமையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆடியோ விழாவுக்கு பதில் 'லியோ'வின் புரமோஷன் விழா.. வெளிநாட்டில் நடத்த திட்டம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ விழாவை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை நேரு

ஜெயிலருக்காக ரஜினிக்கு கிடைத்த அதே பிஎம்டபிள்யூ கார்.. காசு கொடுத்து வாங்கி சூரி அசத்தல்..!

'ஜெயிலர்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய பிஎம்டபிள்யூ கார் பரிசளித்தது என்பது தெரிந்ததே.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரருக்கு ஜாமீன்.. ஆனால் நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 90களின் ஹீரோயின்.. யோகி பாபுவுக்கு அம்மா கேரக்டர்..!

கடந்த 90களில் ரசிகர்களின் மனதில் குடியிருந்த நடிகை, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் யோகி பாபு அம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.