close
Choose your channels

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இவர்தான்: கமல்ஹாசன்

Monday, May 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சே என்றும் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு எப்பவோ கூறிவிட்டேன். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்' என்று கமல்ஹாசன் பேசினார்.

மேலும் இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் உள்ள நிறங்கள் அப்படியே உள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதால் எனக்கும் அந்த ஆசை உள்ளது.

இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள்' என்று கமல்ஹாசன் பேசினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.