close
Choose your channels

பிளீச்சிங் பவுடரை உண்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.....!

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளீச்சிங் பவுடர் என்று தெரியாமல், அதை சாப்பிட்ட சிறுமி தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை, மேலூரை சார்ந்தவர்கள் தான் சீதாராஜ் - பிரேமா தம்பதி. இவர்களுக்கு 5 வயதுடைய இசக்கியம்மாள் என்ற குழந்தை உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்களின் குழந்தை பிளிச்சிங் பவுடர் போன்ற வித்தியாசமான ஒரு பொருளை தெரியாமல் சாப்பிட்டுவிட்டார். இதனால் அவர் உடல் இழைத்து, எலும்புகள் தெரியும் அளவிற்கு மெல்லிய தோற்றத்துடன் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாக, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் இதற்கு உதவி புரிந்தார். குழந்தையை மருத்துவமனை கொண்டுவரச்சொல்லி, அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சையை துவங்கியுள்ளார் .

இந்நிலையில் குழந்தையின் உடல்நலம் குறித்து அவர் கூறியிருப்பதாவது,
"குழந்தையின் உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைக்கு உணவு உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உயர்தர சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் மதுரையில் செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளோம்" என்று மருத்துவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.