ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா??? போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு அதிர்ந்துபோன தொழிலாளி!!!

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் வாகனத்தைப் பார்த்தவுடன் அத்தொழிலாளி தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார். மாஸ்க் அணியவில்லை என்ற அச்சத்தால் போலீஸாரைப் பார்த்தவுடன் தொழிலாளி இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட போலீஸார் ஆடுகளை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று இருக்கின்றனர். தனது ஆடுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு காவல் நிலையத்திற்குச் சென்று தொழிலாளி கேட்டு இருக்கிறார்.

அப்போது நீ ஏன் மாஸ்க் அணியாமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாய், உனக்கு மட்டுமல்ல இனிமேல் ஆடுகளுக்கும் மாஸ்க் போட்டுத்தான் வெளியே அழைத்து வரவேண்டும் என அச்சுறுத்தி இருக்கின்றனர். இதைக்கேட்ட தொழிலாளி அதிர்ந்து போயிருக்கிறார். இதுகுறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

More News

அவர் படிச்சதே மோசடி செய்துதாங்க… அதிபர் மீது வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி ட்ரம்ப்

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவுக்கு கொரோனா

காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு!

விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

புதிய சுற்றுச்சூழல் விதிகள் குறித்து நடிகர் கார்த்தியின் ஆக்கபூர்வமான பதிவு!

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய சுற்றுச்சூழல் விதி குறித்து கடும் எதிர்ப்புகளை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட

நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா: இயக்குனர் சேரன் ஆவேசம்

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது