காதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

ஆந்திராவில் குழந்தைகளின் படிப்புக்காக தாலியைவிற்று டிவி வாங்கிய பெண்மணியைப் போல தற்போது கர்நாடகாவிலும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பெலகாவியா மாவட்டம் கோகாக் அடுத்த அங்கலகி என்னும் கிராமத்தைச் சார்ந்த தேவதாசி பெண்ணான சரோஜினின் 16 வயது மகள் அரசு பள்ளியில் படித்து வருகிறார். கர்நாடக அரசு பள்ளிகளில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சரோஜினியின் குடும்பம் ஏழ்மையில் இருப்பதால் அவருடைய வீட்டில் டிவியோ அல்லது ஸ்மார்ட் போனோ இல்லை. அக்கம் பக்கம் வீட்டிற்கு சென்று படிக்கலாம் என்றாலும் தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் இந்தக் குழந்தையை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்நிலையில் சரோஜினி தனது காதில் இருந்து கம்மலை ரூ.11 ஆயிரத்திற்கு விற்று அதில் ரூ. 7 ஆயிரத்திற்கு ஸ்மார்ட் போனை வாங்கியிருக்கிறார். தற்போது தனது மகள் ஸ்மார்ட் போனில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கிறார் என்று பெருமையோடு கூறுகிறார் சரோஜினி. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பாடங்களை ஆன்லைனில் நடத்த பள்ளிகள் திட்டமிட்டு இருக்கின்றன. இதனால் ஏழை மாணவர்களின் நிலைமை கேள்விக் குறியாகி இருக்கிறது. அதுவும் விளிம்பு நிலையில் இருக்கும் கிராமத்து குழந்தைகளின் நிலைமை என்னவாகுமோ என்பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

More News

கொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா??? ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி

கடந்த இரண்டு நாட்களாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வருவதுமான

ரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா?

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை-28' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நிதின் சத்யா அதன் பின்னர் 'சத்தம் போடாதே' 'சரோஜா' 'பந்தயம்' 'முத்திரை' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தார்.

ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத  விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி

பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்றும் அதனை நான் செய்யாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்றும் கமல் பட நடிகை

கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!! 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று