close
Choose your channels

10 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

Wednesday, November 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே இன்று பொதுவிடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நாளையும் 16 மாவட்டங்களுக்கு அரசு பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகள் என எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், ஆகிய 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட 16 மாவட்டங்களிலும் பேரிடர் பணியில் உள்ள ஊழியர்கள் தவிர மற்ற பணியாளர்கள் பணிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அரசாணையும் சற்றுமுன் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.