close
Choose your channels

சமந்தாவின் இதயத்தில் சிறப்பு இடம் பிடித்தது என்ன தெரியுமா?

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா தனது இதயத்தில் சிறப்பு இடம் பிடித்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகள் காரணமாக மன அமைதி இன்றி இருந்த சமந்தா இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று இருந்தார் என்பதும் அவருடன் அவருடைய தோழியும் சென்றிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று தனது ஆன்மீகச் சுற்றுப் பயணம் நிறைவு பெற்றதாக கூறி உள்ள சமந்தா, மேலும் அந்த பதிவில் கூறியுள்ளதாவது: நான் எப்போதுமே இமயமலை ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். மகாபாரதம் படித்ததிலிருந்து இந்த பூமியில் உள்ள சொர்க்கமான இமயமலையை பார்க்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாக இருந்தது.

இமயமலை என்பது ஒரு மர்மமான இடம் ஆகும். அந்த இடத்தை நான் எதிர்பார்த்தது போலவே பார்த்து முடித்து விட்டேன். அமைதியான மற்றும் கம்பீரமான இமயமலை என்பதும் கட்டுக்கதைக்கும் உண்மைக்கும் இடையே ஒரு சிக்கலான நிலையைக் கொண்டுள்ளது. இமயமலைக்கு என் இதயத்தில் எப்போதும் ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.