close
Choose your channels

கடலூரில் அடித்து நவுத்திய பேய்மழை… மின்னல் தாக்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழந்த பரிதாபம்!!!

Tuesday, September 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலூரில் அடித்து நவுத்திய பேய்மழை… மின்னல் தாக்கி அக்கா-தம்பி இருவரும் உயிரிழந்த பரிதாபம்!!!

 

கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் மதியத்தில் இருந்து மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் காய்ச்சி நிலையில் நேற்று மாலை மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த கனமழைக்கு நடுவே இடியும் மின்னலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் சண்முகம். இவருடைய 2 குழந்தைகளும் நேற்று மாலை, அருகில் உள்ள தோட்டத்திற்கு மாடு மேய்க்கச் சென்றபோது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

7 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா(13), 6 ஆம் வகுப்பு படித்து வந்த கவியரசன் (11) ஆகிய இருவரும் நேற்று மாலை மாடுகளை மேய்ப்பதற்காக தங்களது சொந்த தோட்டத்திற்கு சென்றிருந்ததாகவும் அப்போது திடீரென்று மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து தீயணைப்பு துறையினர் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் கண்போரை கண்கலங்க வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.