ஐ.ஐ.டி கேரள மாணவி செல்போனில் இருந்த தகவல்கள் உண்மை. மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம், தடவியல் துறை தகவல்

சென்னை ஐ.ஐ.டியில் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கேரளா மாநிலம் கொல்லம் கிளிகொள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.கடந்த மாதம் 9ம் தேதி இவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கள் மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் மாணவியின் செல்போனில் தனது தற்கொலைக்கு காரணம் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன்,ஹீமச்சந்திரன் ஹாரா,மிலன்ட் பிராமி போன்றோர் காரணம் என குறிப்பு எழுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குறிப்பு உண்மைதானா இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு தடவியல் துறைக்கு மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 6 நாட்களாக நடந்த ஆய்வுக்கு பிறகு தடவியல் துறை தனது அறிக்கையை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த ஆய்வில் மாணவி, பேராசிரியர்கள் குறித்து பதிவு செய்து வைத்திருந்தது உண்மைதான் என நிரூபணமாகி உள்ளது. அதேநேரம் இதை தனியாக விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் உறுதி படுத்தவில்லை.ஆனால் விசாரணையை பேராசிரியர்கள் பக்கம் திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

More News

நானே ஒரு பொறம்போக்கு..பரதேசி.. என்னையெல்லாம் ஒன்னுமே செய்ய முடியாது..நேற்று வெளிவந்த வீடியோவில், நித்தியானந்தா.

தனது ஆஸ்ரமத்திற்கு பிரியானந்தா என்ற பெண்ணை ஆதீனமாக்கி இருப்பதா&#

கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த நிலையிலும் டிக்டாக்: இளம்பெண்களின் அட்டகாசம்!

அமெரிக்காவில் 16 வயதேயான இரண்டு இளம்பெண்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வளைவில் அந்த கார் கவிழ்ந்தது. இதனை அடுத்து காரிலிருந்து வெளியே வர முடியாமல்

வெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பார்ட்டி' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சிம்புவை வைத்து இயக்கும் 'மாநாடு'

கடன் வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியவரை, கத்தி மற்றும் துப்பாக்கியுடன் சென்று வங்கிக்குள்ளேயே தாக்குதல் நடத்தியவர் கைது..!

கோவையில் கனரா வங்கி கிளைக்குள் ஏர்கன் மற்றும் கத்தியுடன் நுழைந்த ஒருவர், கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய இடைத்தரகர் மற்றும் அவரை காப்பாற்ற வந்த மேனேஜரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே.