விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் இதுதான்: 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் அவருடன் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தான் விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து மீண்டும் ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படம் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவராசியமாக பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் ’நீங்கள் கடைசியாக விஜய்க்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் என்ன? என்று கேட்டதற்கு அவர் ’ஹாப்பி பர்த்டே’ என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள், கெளரவர்கள் யார்: பிரபல இயக்குனரின் சர்ச்சை கேள்வி

திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள் யார் என பிரபல இயக்குனர் சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுப்பியுள்ள நிலையில்

விஜய்யின் 'வாரிசு' படம் காப்பியா? பிரபல நிறுவனம் விளக்கம்!

தளபதி விஜய்யின் 'வாரிசு'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் சமீபத்தில் அவருடைய பிறந்த நாள் விருந்தாக வெளியாகின என்பதும் இந்த படத்தின் மூன்று புகைப்படங்கள் மிகப்பெரிய

'முக்கா துட்டு கப்பகிழங்கே, அக்கா பெத்த  அச்சு முறுக்கே': 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்

 தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் காமெடி ஜோடியான கவுண்டமணி - செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

சாய்பல்லவியுடன் மீண்டும் இணைந்த சூர்யா!

சாய் பல்லவி நடித்த 'கார்கி' என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.