close
Choose your channels

'தி லெஜண்ட்' இயக்குனர்களின் அடுத்த படம்: 19 வருடங்கள் கழித்து உருவாகும் 2ஆம் பாகமா?

Thursday, September 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும், 19 வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக அந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அஜித் நடித்த ’உல்லாசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர் இயக்குனர்கள். இந்த இரட்டையர்கள் இயக்கத்தில் தொழிலதிபர் அருள் சரவணன் நடிப்பில் உருவான ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவான ’விசில்’ என்ற திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் ஷெரின், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 19 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஜேடி- ஜெர்ரி இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஷெரின் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.