ஆஹா இதுபுதுசா இல்ல இருக்கு… இணையத்தில் வைரலாகிவரும் “420” “ராகுல்மோடி” பெயர்!!!

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஹரியாணாவை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆனால் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தவரைவிட 420 ஆவது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்ற மற்றொரு நபர்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி இருக்கிறார். காரணம் அவருடைய பெயர் ராகுல்மோடி .

அரசியலில் இருபெரும் துருவங்களாக இருந்து வரும் இந்த இருவரையும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு நபரின் பெயர் இணைத்திருக்கிறது. இதனால் ராகுல்மோடி என்ற பெயரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வதும் அதிகரித்து இருக்கிறது. தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி இருவரின் பெயர்களையும் இணைத்து வைத்ததுபோலவே ராகுல்மோடி என்ற இளைஞர் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 420 ஆவது இடத்தைப்பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த பெயர் குறித்து தற்போது பலரும் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர். ராகுல்மோடி, நீங்க எந்த கட்சிக்கு ஆதரவாளர்? காங்கிரஸ் கட்சியா? அல்லது பாரதிய ஜனதவா? என்று ஒரு இணையவாசி கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் “இந்த நூற்றாண்டின் ஒரு மாபெரும் இணைப்பு” என்று பதிவிட்டு இருக்கிறார். இத்தகைய கிண்டலுக்கு மத்தியில் “சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்னவென்று தெரியுமா? இதில் தேர்ச்சிப்பெற அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். இப்படி கிண்டலடிப்பதை நிறுத்துங்கள்” என மற்றொரு பதிவு காட்டமாகவும் வந்திருக்கிறது.

More News

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: மாற்றுத்திறனாளி உட்பட கெத்துக்காட்டும் தமிழக மாணவர்கள்!!!

கடந்த 2019, செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் பாஸ் செய்த மாடலிங் அழகி: குவியும் பாராட்டுக்கள்

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த தேர்வில் வெற்றி பெற்றனர் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

நான் முதலமைச்சராக பதவி ஏற்றதும் செய்ய போகும் முதல் காரியம்: சூப்பர் மாடல் மீராமிதுன்

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்

கொட்டித்தீர்க்கும் கனமழை!!! தாய் தனது 3 குழந்தைகளோடு அடித்துச் செல்லப்பட்ட அவலம்!!!

மும்பை மாநகரில் நேற்று முன்தினம் இரவு முதல் கனத்த மழைபெய்து வருகிறது.

பாகிஸ்தான் அரசின் புதிய வில்லத்தனம்… கண்டனம் தெரிவிக்கும் மத்திய அரசு!!!

பாகிஸ்தான் அரசு தனது புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரைபடத்தை மத்திய அரசு முற்றிலும் நிராகரித்ததோடு கடும் கண்டனங்களையும் தெரிவித்து இருக்கிறது.