இனி கார்ஃபைடு கல் வேண்டாம்! பழங்கள் பழுக்கவைக்க வந்தது புது டெக்னிக்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

பழ சந்தைகளில் உடனடியாக பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்ஃபைட் கற்களை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் உடலுக்கு அதிக அளவு தீங்கு உள்ளது என்பதை அறிந்தும், ஒரு சிலர் தொடர்ந்து கார்ஃபைட் கல் வைத்து பழுக்கவைக்கப்படும் பழத்தை விற்பனை செய்து வந்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின், அறிவுறுத்தலை மீறி இப்படி விற்பனை செய்யும் பழங்களை, கண்டறிந்து அதிகாரிகள், ரசாயன கலவைகள் பயன்படுத்தி அழித்ததோடு, அபராதமும் விதித்து உரிய நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் முழுமையாக கார்ஃபைட் கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழக்கம் வியாபாரிகளிடமிருந்து செல்லவில்லை. இந்நிலையில் தற்போது இதற்கு மாற்று முறையாக எத்திலின் வாயு மூலம், பழங்களை பழுக்க வைக்கலாம் என்றும், இதனால் உடலுக்கு எந்த தீங்கும் வராது எனக் கூறி உணவு பாதுகாப்பு துறையினர் பழ வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

எத்திலின் வாயு மூலம் ஏற்கனவே,பெரிய பெரிய கிடங்குகளில் பழங்களை பழுக்க வைக்கும் முறை அமலில் உள்ளது. ஆனால் சிறிய வியாபாரிகளால் அதனை செய்ய முடிவதில்லை. இதனால் எத்திப்பான் வேதிப் பொருளை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கலாம் என கூறி வருகின்றனர். எத்திப்பானை நேரடியாக பழங்கள் மீது உபயோக படுத்தாமல்... நீர் உள்ள பக்கெட்டுகளில் அடைத்து வைத்து, காற்று ஊடுருவும் சிறு பெட்டியில் பழங்களை அடுக்கி, வைப்பதன் மூலம் அந்த காற்று பட்டு இந்த பழங்கள் மெல்ல மெல்ல பழுக்க துவங்கும்.

இதற்கான உரிய பயிற்சிகளையும் அதிகாரிகள் பழ வியாபாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். வியாபாரிகளும் அதிகாரிகளின் இந்த புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பழ சந்தைகளில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.

மேலும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்கள் 24 நேரத்தில் பழுக்கும், என்றால் இந்த முறையில் 48 மணி நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளனர். இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்களை பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி சாப்பிடலாம் என கூறுகிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

More News

10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்! பணத்திற்காக அரங்கேறிய அவலம்!

பணத்திற்கு ஆசைப்பட்டு, 10 வயது மகளை 40 வயதாகும் நபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த, கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்...

இனி "தலப்பாகட்டி பிரியாணியை" பயன்படுத்த கூடாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உணவு பிரியர்களை பொறுத்தவரை, பல பிரியாணி கடைகள் இருந்தாலும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையை தேடி சென்று சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்...

இராவண கோட்டம் படத்தின் நாயகி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ள 'இராவண கோட்டம்' என்ற திரைப்படத்தை 'மதயானைக்கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ளார்

பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு எலும்பு முறிவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

தன்னுடைய குரலால் பல இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர், பிரபல பாடகி எஸ்.ஜானகி. அவருக்கு திடீர் என எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னா செய்தாரை வச்சு செய்துவிடல்: 'Mr.லோக்கல்' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய ''Mr.லோக்கல்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.