close
Choose your channels

இயக்குனர் 'மர்மதேசம்' நாகாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்கள்..!

Friday, June 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ’மர்மதேசம்’ நாகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக அவருடைய தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 90களில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள் இயக்கியவர் இயக்குனர் நாகா. குறிப்பாக ’மர்மதேசம்’ என்ற தொலைக்காட்சி தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’ரகசியம்’ ’விடாது கருப்பு’ ’சிதம்பர ரகசியம்’ ’யாமிருக்க பயமேன்’ உட்பட பல சீரியல்கள் அவர் இயக்கி உள்ளார் என்பதும் ’ஆனந்தபுரத்து வீடு’ என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் வெப் தொடர் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் சர்ஜரிக்கு பின்னர் அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் இருப்பதாகவும் அவருடைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் ’மர்மதேசம்’ நாகா காலமாகி விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் அந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.