தமிழ் சினிமாவில் மேலும் ஒரு காதல் ஜோடி: காதலர் தினத்தில் அறிவிப்பா?

  • IndiaGlitz, [Wednesday,February 09 2022]

தமிழ் சினிமாவில் சூர்யா - ஜோதிகா, ஆர்யா- சாயிஷா, பிரசன்னா - சினேகா உட்பட பல நட்சத்திர தம்பதிகளின் காதல் வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நட்சத்திர காதல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், வரும் காதலர் தினத்தில் இவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

இதனை அடுத்து கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

மலைப்பாம்பை தோளில் மாட்டி கொண்ட யாஷிகா ஆனந்த்: வைரல் வீடியோ

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இருக்கும் நிலையில் மலைப்பாம்பை தூக்கித் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் வீடியோவை யாஷிகா வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'பொன்னியின் செல்வன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்!

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் அதே டைட்டிலில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

40 மணிநேரப் போராட்டம்… மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கேரள மாநிலத்தில் மலையேற்றத்தின்போது மலை இடுக்கில் மாட்டிக்கொண்டு

வொர்க்-அவுட் செய்யும் சமந்தாவை தொந்தரவு செய்வது யார் தெரியுமா? வைரல் வீடியோ!

பிரபல நடிகை சமந்தா வொர்க் அவுட் செய்யும் போது அவருக்கு இடைஞ்சலாக இருக்கும் காட்சிகள் குறித்த வீடியோ தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 

2 நாட்களாக மலையிடுக்கில் சிக்கிய இளைஞர்: ராணுவம் உதவ வேண்டுமென முதல்வர் கோரிக்கை!

இரண்டு நாட்களாக செங்குத்தான மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை காப்பாற்ற ராணுவ உதவி செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.