close
Choose your channels

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன்: எஸ்.ஏ.சி

Wednesday, November 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கம் பெயரில் அரசியல் கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த கட்சியில் தன்னுடைய ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம் என விஜய் ஏற்கனவே அறிக்கை விட்டு இருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த கட்சியை கண்டு கொள்வதில்லை

இந்த நிலையில் எஸ்.ஏ.சி கட்சியின் தலைவர் என அறிவிக்கப்பட்ட பத்மநாபன் மற்றும் பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவருமே கட்சியிலிருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்றும் எஸ்.ஏ.சி சந்திரசேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்

சென்னை வடபழனியில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது கட்சியிலிருந்து தலைவரே விலகியது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த போது ’யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று கூறினார். மேலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது மிரட்டல் வரும் என்று தனக்கு தெரியும் என்று அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். மேலும் தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எப்போதுமே இருந்ததில்லை என்றும் எதிர்நீச்சல் போடுவதை தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.