close
Choose your channels

ஆபாச படம் அனுப்பியவனுக்கு கத்தி காட்டி மிரட்டல்....!போலீசார் அதிரடி கைது ...!

Wednesday, July 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழர் முன்னேற்றப் படையின் தலைவராக இருக்கும் வீரலட்சுமிக்கு கடந்த மார்ச் மாதத்தில், பல எண்களில் இருந்து ஆபாச படங்கள் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து அவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் இவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு மீண்டும் ஆபாச வீடியோக்களை அனுப்ப துவங்கியுள்ளனர் மர்ம நபர்கள். இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவன் சரணடைய வேண்டும் என மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து தனியார் யுடியூப் சேனலிலும் பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் ஆபாச வீடியோ அனுப்பியவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்தவன் தான் டிரில்லிங் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வரும்ஆரோக்கியசாமி. 38 வயதுடைய இந்த நபரை கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.