close
Choose your channels

எஸ்பிபி இறுதிச்சடங்கு குறித்த தகவல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா?

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமான நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு எஸ்.பி.பி உடல் இறுதி அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது. அதன்பின்னர் எஸ்.பி.பி இறுதிச்சடங்கு அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும், சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவரது உடல் வைக்கப்படவிருக்கும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.