close
Choose your channels

பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு...!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் தலைமையில் பல்லவன் இல்லத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதிலும் போக்குவரத்துறை முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பேருந்தில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த உத்தரவு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிர்பயா திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படும். பெண்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல ஏதுவான வகையில், தமிழகத்தில் உள்ள நகரப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்படும்.

மக்கள் பேருந்து வழித்தடங்கள் குறித்து அறிந்துகொள்ள "சலோ" என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.