close
Choose your channels

விட்ட குறை தொட்ட குறையே இருக்கக்கூடாது: அனைவருக்கும் பண்ணிடுங்க... அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!!!

Monday, June 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விட்ட குறை தொட்ட குறையே இருக்கக்கூடாது: அனைவருக்கும் பண்ணிடுங்க... அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!!!

 

டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அசாதாரணமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா மற்றும் டெல்லியின் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இரண்டாவது அதிகம் பாதிப்புள்ள மாநிலமாக தமிழ்நாடு, அடுத்த நிலையில் டெல்லி விளங்கி வருகிறது. இதுவரை 41,182 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வருகிற ஜுலை மாதத்தின் நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் எனவும் ஒரு கணிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கையை குறைக்கும் வகையில் டெல்லி ஆட்சிப்பகுதியில் அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை விரைந்து நடத்தி விட வேண்டும் என்ற முடிவிற்கு மத்திய அரசு வந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் படி ஜுலை 20 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் தலைமையிடமாக இருக்கும் டெல்லி என்பது உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். எனவே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. முன்னதாக சிகிச்சைக்கு மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியானது. எனவே பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் 500 ரயில் பெட்டிகள் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கொரோனா வைரஸ் விவாரகாரத்தில் மத்திய அரசின் துரிதமான நடவடிக்கையை எடுத்து வருவதைப் பார்த்தால் நிலைமை மோசமாக இருக்குமோ என்ற அச்சத்தையும் சிலர் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.