close
Choose your channels

ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

Friday, March 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. அதற்கான பயிற்சிகளில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஈடுபட்ட வந்தன என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான தல தோனி உள்பட பலர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும் அல்லது பார்வையாளர் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன.

ஆனால் பார்வையாளர் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று பிசிசிஐ மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பார்வையாளர்களால் பரவாமல் இருக்கும் வகையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி தற்போது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகளின் புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.