அமெரிக்காவில் நடக்கும் இனவெறிக்கு எதிரான போராட்டம்: ஆதரவு தெரிவித்த ட்ரம்பின் இளைய மகள்!!!

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

 

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் அச்சுறுத்தலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டும் அமெரிக்கா முழுவதும் கடந்த 9 நாட்களாக போராட்டங்கள் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்களுக்கு உலகம் முழுவதும் உள்ள கறுப்பினத்தவர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். சில உலகத் தலைவர்களும் அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களுக்கு கவலைத் தெரிவித்து உள்ளனர். போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து அதிபர் ட்ரம்ப் கடுமையான அதிருப்தியையும் எச்சரிக்கையையும் விடுத்து இருந்தார்.

மேலும் உள்ளூர் பயங்கரவாதம், போராட்டங்களில் வன்முறை தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனவும் பேசி விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தார். மாகாணங்களில் ஆளுநர்கள் போராட்டங்களை ஒடுக்க தவறி விட்டனர் என அவர்கள்மீது குற்றம் சுமத்தி ஆளுநர்களின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பேரணியும் அமைதியான முறையில் நடைபெற்றது. இச்சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட காவல் அதிகாரிகளின் மீது அதிகபடியான வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. மேலும் சட்டங்களில் திருத்தம் தேவை, இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஆதரவு குரல்கள் அதிகரித்து இருப்பதால் தற்போது அமெரிக்காவில் போராட்டங்கள் சற்று ஓய்ந்து இருக்கின்றன.

இந்நிலையில் அதிபரின் இரண்டாவது மகளாகக் கருதப்படும் டிஃப்பினி (26) அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்து இருக்கிறார். ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது சமூக வலைத் தளங்களில் #blackout Tuesday என்ற ஹேஷ்டேக்கை தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் உயிரிழந்தவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு கருப்பு படம் வெளியாகும். அதிபர் ட்ரம்ப்பின் இரண்டாவது மனைவி மூலமாக பிறந்த டிஃப்பனி இந்த ஹேஷ்டேக்கை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும், “தனியாக நாம் மிகக் குறைவாகவே சாதிக்க முடியும். ஒன்றாக நாம் இவ்வளவு சாதிக்க முடியும் என்ற கேப்ஷனையும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். #blackout Tuesdayforgeorgefloyed என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அதோடு, அதிபரின் இரண்டாவது மனைவியான மேப்பிள்ஸ் #blackout Tuesday ஹேஷ்டேக்கை பதிவிட்டு போராட்டத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல ஹீரோவுடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' உள்பட ஒரு சில படங்களிலும் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ்.

கொரோனாவில் இருந்து குணமாகிய குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் எவ்வளவு?

சென்னையில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி அடுத்தடுத்து வரப்போகும் 3 விண்கற்கள்!!! 2020 இதோடு முடியாது போல...

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கு அடுக்கடுக்காக பல பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.