செண்ட்ராயனுக்காக ஐஸ்வர்யா செய்வது தியாகமா? நாடகமா?

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை அடுத்து போட்டியாளர்களிடையான போட்டியும் கடுமையாகிவிட்டது. சக போட்டியாளர்களை வெளியேற்ற எதையும் செய்ய போட்டியாளர்கள் தயாராகிவிட்டனர்.

அந்த வகையில் நேற்று ஒரு டாஸ்க் அளிக்கப்பட்டது. அதன்படி போன் மூலம் சொல்லப்படும் டாஸ்க்கை குறிப்பிட்ட ஒருவரை அவருடைய ஒப்புதலோடு செய்ய வைக்க வேண்டும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு நேற்று வழங்கப்பட்ட டாஸ்க்கில் செண்ட்ராயனிடம் பொய் சொல்லி அவருடைய தலைமுடியின் கலரை மாற்றினார். இதனால் சக போட்டியாளர்கள் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது. இதன்படி ஐஸ்வர்யாவின் தலைமுடி வெட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். செண்ட்ராயனை ஏமாற்றியதால் குற்ற உணர்வில் இருக்கும் ஐஸ்வர்யா, தற்போது செண்ட்ராயனை காப்பாற்ற தனது தலைமுடியை வெட்ட சம்மதிக்கின்றார். அதனால் அவருடைய தலைமுடி வெட்டப்படுகிறது.

வழக்கம்போல் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும் மும்தாஜ், 'என்னுடைய தலைமுடி இரண்டு இன்ச் போனல் கூட என் உயிரே போய்விடும்' என்று ஏற்றிவிடுகிறார். எப்படியோ, இந்த வாரம் மக்களிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா போடும் நாடகம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பலகுரல் மன்னனுமான ராக்கெட் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 74

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ரஜினி படம் பார்த்ததால் குணமான இதயநோய் சிறுவன்: டாக்டர்கள் ஆச்சரியம்

பெங்களூரை சேர்ந்த சிறுவனுக்கு சமீபத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் தொடர்ந்து ரஜினி படத்தை பார்த்ததால் விரைவில் குணமானதாக

சோபியாவின் டுவிட்டர் பக்கம் திடீர் மாயம்

சென்னை-தூத்துகுடி விமானத்தில் சாதாரண சின்ன சண்டையாக ஆரம்பித்த தமிழிசை-சோபியா விவகாரம் அதன் பின்னர் காவல்துறையில் புகார், கைது, இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான டிரெண்ட்

சோபியா விடுதலைப்புலியா? சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம்

கனடாவில் விடுதலைப்புலிகள் அதிகம் இருப்பதால் கனடவில் படித்து கொண்டிருக்கும் சோபியாவும் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.