பெண் பிறப்புறுப்பை தெய்வமாக வழிபடும் கோவில் பற்றி தெரியுமா? ஆச்சர்யத் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,January 06 2022]

இந்து மதத்தில் கோவில்கள் என்றாலே அதன் திருவுருவச் சிலைதான் பிரதான இடம்பிடித்திருக்கும். இப்படியிருக்கும்போது அசாம் மாநிலத்தில் ஒரு பெண்ணின் யோனியை (பிறப்புறுப்பை) தெய்வமாக நினைத்து வழிபாடு நடத்திவரும் கோவில் பற்றிய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள காமக்யா எனும் கோவிலில் ஒரு பெண் மேடையின் மீது அமர்ந்திருப்பது போன்ற திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழே ஒரு பெண்ணின் யோனி உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யோனி உருவத்தைத்தான் மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

மேலும் யோனியை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாம் அந்தப் பெண் கடவுள் வருடத்தில் 3 நாட்கள் மாதவிலக்கில் இருப்பதாகக் கூறி அந்தக் கோவிலை மூடுவிட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதனால் பிரம்மப்புத்திரா நதி குறிப்பிட்ட அந்தத் தினத்தில் சிவப்புநிறத்தில் ஓடுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கையும் இருந்துவருகிறது.

கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோவிலில் வயதுக்கு வராத இளம்பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்படுகின்றன.

ஆதிகாலத்தில் இயற்கையைப் பார்த்து பயந்த மனிதன் ஒருகட்டத்தில் மரம், மழை போன்ற இயற்கைச் சார்ந்த பொருட்களை வழிபட ஆரம்பித்துவிட்டான். அதேபோல மனிதனின் பிறப்பிற்குக் காரணம் தேடிய நமது முன்னோர்கள் ஆண்/பெண் பிறப்புறுப்புகளுக்கு மதிப்புக் கொடுத்து அதை வழிபட்டதாகவும் இதுபோன்ற வழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே இருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் உதாரணங்களை எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் அசாம் மாநிலத்தின் காமக்யா கோவிலும் ஒரு புது ஆச்சர்யத்தைக் கொண்டிருக்கிறது.

More News

சத்தமே இல்லாமல் அசுர வளர்ச்சி… இந்தியாவிலும் ஒரு குட்டி டெஸ்லா!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார் உற்பத்தியால்

ஐடி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்… ரூ.1.10 கோடி சம்பளம்?

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சையைத் தொடர்ந்து இந்திய ஐடி மாணவி ஒருவருக்கு கூகுள் நிறுவனம் ரூ.1.10 கோடி

இது முட்டாள் செய்யும்வேலை… போட்டியின்போதே இளம்வீரரை வறுத்தெடுத்த காவஸ்கர்!

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தூக்கியடிக்க

ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் 'வலிமை' தயாரிப்பாளரின் துணிச்சலான முடிவு!

தமிழகத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூன்று காட்சிகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபுவா?

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது வெங்கட்பிரபு என்ற  தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.